Header Ads

ad

ஐஸ்வர்யா ராய் எதை நினைத்து பயந்தாரோ அது நடந்துவிட்டது

நடிகை ஐஸ்வர்யா ராய் எதை நினைத்து பயந்தாரோ அது நடந்துவிட்டது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் இருந்தார். 

சமூக வலைதளங்கள் மூலம் அதிகம் நெகட்டிவிட்டி பரப்பப்படுவதாக அவர் கருதினார். அந்த காரணத்தால் ஒதுங்கி இருந்த அவர் இறுதியாக இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார்.

ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற இடத்தில் தனது மகள் ஆராத்யாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

மேற்கத்திய நாட்டில் உள்ளவர்களை போன்று சில இந்தியர்கள் தங்களின் குழந்தைகளுக்கு உதட்டில் ஏன் முத்தம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ச்சீ, அசிங்கமாக உள்ளது. பல பிரபலங்கள் இதை தான் செய்கிறார்கள் என்று இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நபர் ஒருவர் ஐஸ்வர்யா பற்றி கமெண்ட் போட்டுள்ளார்.



மற்றவர்களை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் 5, 6 வயது குழந்தையின் உதட்டில் முத்தம் கொடுப்பது கேவலமாக உள்ளது. கருமம் என்று நளினி பவார் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் ஆசை, ஆசையாய் அந்த முத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ஆனால் நெட்டிசன்களோ அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்று தேவையில்லாத விமர்சனங்களுக்குள்ளாக வேண்டுமே என்று பயந்து தான் ஐஸ்வர்யா ராய் இத்தனை நாட்களாக சமூக வலைதளம் பக்கமே வராமல் இருந்தார். ஆனால் தற்போது அவர் பயந்தது நடந்துவிட்டது.